மூன்றாம் தந்திரத்துள் யோகத்தினைப் பல்வகையாலும் விளங்கக்கூறிய நாயனார், நான்காம் தந்திரத்துள் கிரியை கூறுவாராய், அதனை மந்திர யந்திர வடிவினதாகக் கூறுகின்றார். மந்திர யந்திரங்கள் யோகத்திற்கும் உரியவாகலின், அவை முன்னைத் தந்திரப் பொருளோடு இயைபுற்றுநின்றன. அவற்றுள் யோகத்திற்கே உரியது `அசபை` என்னும் மந்திரமாதலின், அதனையே முதற்கண் முப்பது திருமந்திரங்களால் கூறுகின்றார். இம் முப்பது மந்திரங்களும் அந்தாதியாயே வருதல் நோக்கத் தக்கது.